Posts

Showing posts from December, 2019

புத்தாண்டு கேக் செய்வது எப்படி?

Image
புத்தாண்டு கேக் தேவை:  வெள்ளை ரவை - 2 கப், பொடித்த சர்க்கரை - ஒன்றரை கப், பால் - 2 கப், தயிர் - ஒரு கப், நெய் - அரை கப், உப்பு - அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா - தலா ஒரு டீஸ்பூன், ஜாதிக்காய் (பொடித்தது) - கால் டீஸ்பூன், மெலிதாகச் சீவிய பாதாம், முந்திரித் துண்டுகள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை:  ஒரு பாத்திரத்தில் வெள்ளை ரவை, பொடித்த சர்க்கரை இரண்டையும் சேர்த்துக் கலக்கவும். பிறகு உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மூன்றையும் அதில் சேர்த்துக் கலந்து நெய் சேர்த்துக் கலக்கவும். பால், தயிர் இரண்டையும் மிக்ஸியில் ஓர் அடி அடித்து அதில் சேர்த்து பொடித்த ஜாதிக்காயையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். விஸ்க் (அ) மத்து (மோர்கடைவது) இரண்டில் எது இருந்தாலும் ஒரே முறையாக (வலது பக்கம் அடித்தால் வலது பக்கமாக, இடது பக்கம் அடித்தால் இடது பக்கமாக) கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு ஒரு நான்-ஸ்டிக் பானில் (pan) ஒரு ட்ரேஸ் பேப்பர் போட்டு அதன் மேலே நெய் தடவி மைதா மாவைத் தூவி, கலந்த மாவு கலவையை அதில் ஊற்...

புளியோதரை செய்வது எப்படி? மார்கழி மாத ஸ்பெஷல்!!!

Image
புளியோதரை தேவை:   உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், திக்கான புளிக்கரைசல் - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. வறுத்துப் பொடிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன். தாளிக்க: நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - 10 இதழ்கள். செய்முறை:  வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். பொடித்ததை தனியே வைக்கவும். அதே வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து புளிக்கரைசலை அதில் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். புளிக்கரைசல் தாளித்த பொருள்களுடன் சேர்ந்து கொதித்து பாதியளவு சுண்டி வந்ததும் பொடித்து வைத்த பொடியைத் தூவி (விருப்பப்பட்டால் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து) எல்லாமுமாகச் சேர்ந்து வந்ததும் இறக்கி, சாதத்த...

அரை நெல்லிக்காய்ப் பாயசம் செய்வது எப்படி? துவாதசி தின விருத ஸ்பெஷல்!!!

Image
அரை நெல்லிக்காய்ப் பாயசம் தேவை:  அரை நெல்லிக்காய் - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒரு கப், தேங்காய்ப்பால் (திக்கானது) - அரை கப், பல்லுப் பல்லாக கீறிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 4 டேபிள்ஸ்பூன், மெலிதாகச் சீவிய பாதாம், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.   செய்முறை:  வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு தேங்காய்க்கீற்றை வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு சீவிய பாதாம், முந்திரியை வறுத்துத் தனியே வைக்கவும். மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு அரை நெல்லிக்காயை விதை நீக்கி சேர்த்து வதக்கி ஒரு கப் நீர்விட்டு வேகவிடவும். நெல்லிக்காய் வெந்ததும் வெல்லத் துருவல் சேர்த்து இரண்டு கொதிவிட்டு தேங்காய்ப்பால் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிடவும். இதில் ஏலக்காய்த்தூள் தூவி, வறுத்துவைத்துள்ள தேங்காய்க் கீற்று, பாதாம், முந்திரி சீவல்களைச் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும். சிறப்பு:  ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசி அன்று காலை இந்த நெல்லிக்காய், தேங்காய்ப்பால் சேர்த்த ...

மூச்சுத்திணறலை விரட்டும்; மூலிகைகள்!

Image
நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது. அறிகுறிகள்: காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல். சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: 15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணலாம். ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம். ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம். கசகசாப் பொடியில் அரைஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம். பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம். தவசு முருங்கையிலைச் சாறு...

ஏகாதசி கஞ்சி செய்வது எப்படி? ஏகாதசி தின ஸ்பெஷல்!!!

Image
ஏ காதசி கஞ்சி தேவை:  பயத்தம்பருப்பு - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒரு கப், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன். செய்முறை:  பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து நீர் சேர்த்து வேகவிடவும். வெந்த பருப்புடன் துருவிய வெல்லம் சேர்த்து இரண்டு கொதிவிட்டு, பாலைச் சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும். சிறப்பு:  ஏகாதசி அன்று இந்தக் கஞ்சியைச் செய்து பகவானுக்குப் படைத்து பிறகு அருந்தவும். அன்று முழுவதும் விரதம் இருப்பவர்கள், இந்தக் கஞ்சியை அருந்தினால் உடலுக்குத் தெம்பு கிடைக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கும் அதன் பயன்களும்!!!

Image
அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலுள்ள ஒரு என்ஸைம் இதன் மாவுச்சத்தை, கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது. சமைக்கும் போது இதன் இனிப்பு இன்னும் அதிகமாகிறது. கிழங்கு வகையாக இருந்தாலும் இதற்கும் உருளைக் கிழங்குக்கும் சம்பந்தமில்லை. இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக்கத்தில் உள்ள தீவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆக்ஸி என்று அழைத்தனர். கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்து ஸ்பெயினுக்கு திரும்பி வரும் போது நிறைய பொருள்களை எடுத்து வந்தார். அதில் சர்க்கரை வள்ளியும் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இதை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.   வகைகள்: முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன.  1. நீளமாக இளம் மஞ்சள் தோலுடன் அல்லது சிவப்புத் தோலுடன் உள்ளே வெள்ளையாக ஒரு வகை. இதன் உள்சதை காய்ந்தாற் போல இருந்தாலும் நீர் அளவு இவற்றில் மிக அதிகம். 2. வெளியில் சிவப்புத் தோலுடன் உள்ளே ஆரஞ்சு வண்ண சதையுடன் கூடியது. இது கொஞ்சம் மிருதுவாக ஈரப்பதத்துடன் காணப்பட்டாலும் நீர் அளவு குறைவு. ...

நெஞ்செரிச்சலை எளிமையாக தடுப்பது எப்படி ? என்ன வழி?

Image
பொதுவாக நெஞ்செரிச்சல் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. ஏனெனில் சரியாக உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உணவை செரிக்க உதவும் அமிலமானது தேங்கி, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மேலும் அவை நீடித்தால், அந்த அமிலமானது உணவுக்குழல் வழியாக மேலே சென்று நெஞ்சில் எரிச்சலை உண்டாக்குகின்றன. ஆனால் இத்தகைய நெஞ்செரிச்சலை ஒருசில உணவுகள் மூலமாக சரிசெய்ய முடியும். முக்கியமாக உணவுகளை சரியாக சாப்பிடுவதோடு, சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடுவது, குறைந்தது 8 மணிநேரம் தூங்குவது மற்றும் தினமும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்ற வேண்டும். ஒருவேளை ஏற்கனவே நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் உட்காரும் நேரத்தில், அவ்வப்போது ஏதேனும் ஒருசில உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஒருவேளை உணவுகளால் சரிசெய்ய முடியாவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக இந்த நெஞ்செரிச்சலுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவை இருக்கின்றன. அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபட முடியும். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் கூட, நெஞ்செரிச்சலை சரிசெய்யும். சரி இப...

டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிகள் என்ன?

Image
இ ன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சினை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது… வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ் கூறிய எளிய வலியில்லா வழி முறைகளை பின்பற்றுங்கள். காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும். சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி ம...

உடலை வலுவாக்கும் பயறு வகைகள் என்னென்ன?

Image
உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. புரதச் சத்து மிகுதியாக இருப்பதால், பயறு வகைகள் அசைவ உணவுக்குஇணையாகக் கருதப்படுகின்றன. பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முந்தைய நிலையிலும் சாப்பிட ஏற்றவை தான். ஆனாலும், நன்றாக முதிர்ந்தப் பயறு வகைகளில்தான் குறைவான ஈரப்பதமும் அதிகச் சத்துக்களும் இருக்கும். முளைவிட்டப் பயறு வகைகளில் அதிக அளவு நீர்ச் சத்தும், வைட்டமின் சத்துக்களும் இருப்பதால் பூஞ்சைக் காளான் வளர ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், பாதுகாப்பாக வைப்பது அவசியம் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் – பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும். குழந்தைகள் முதல் டீன் ஏஜ் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள் என அனைவருக் கும் பயறு வகைகள் அவசியம் தேவை. அதே சமயம், அதிகமாகச் சாப்பிடுவது நல்லது அல்ல. சைவ உணவு சாப்பிடுபவர்கள், தினமும் ஏதேனும் ஒரு வகை பயறை 50 கிராம் எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பயறுகளைச் சுண்டலாக சமைத்துச் சாப்பிடுவது நல்லது!” எ...

ஆமவடை மோர்க்குழம்பு செய்வது எப்படி? துவாதசி தின விருத ஸ்பெஷல்!!!

Image
ஆமவடை மோர்க்குழம்பு தேவை:  கெட்டித் தயிர் - 2 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு. அரைப்பதற்கு: மல்லி (தனியா) - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்). ஆமவடை செய்வதற்கு: துவரம்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - 8 இதழ்கள். மேலே தூவுவதற்கு: நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்.   செய்முறை:  துவரம்பருப்பு, உளுத்தம்பருப்ப...