ஏகாதசி கஞ்சி செய்வது எப்படி? ஏகாதசி தின ஸ்பெஷல்!!!
ஏகாதசி கஞ்சி
தேவை: பயத்தம்பருப்பு - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒரு கப், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.
![vikatan%2F2019-12%2F28f07516-55f3-4590-b](https://images.assettype.com/vikatan%2F2019-12%2F28f07516-55f3-4590-b0ee-ced69d92359f%2F104.jpg?w=640&auto=format%2Ccompress)
செய்முறை: பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து நீர் சேர்த்து வேகவிடவும். வெந்த பருப்புடன் துருவிய வெல்லம் சேர்த்து இரண்டு கொதிவிட்டு, பாலைச் சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.
சிறப்பு: ஏகாதசி அன்று இந்தக் கஞ்சியைச் செய்து பகவானுக்குப் படைத்து பிறகு அருந்தவும். அன்று முழுவதும் விரதம் இருப்பவர்கள், இந்தக் கஞ்சியை அருந்தினால் உடலுக்குத் தெம்பு கிடைக்கும்.
Comments
Post a Comment