விரத தோசை செய்வது செய்வது எப்படி? விருத நாட்கள் ஸ்பெஷல்!!!
விரத தோசை தேவை: ஜவ்வரிசி - கால் கப், சாமை அரிசி - ஒரு கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, நெய் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: ஜவ்வரிசி, சாமை அரிசி இரண்டையும் தனித்தனியாக ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் இரண்டையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை ஊற்றி உப்பு சேர்த்து சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து மாவை ரவா தோசை மாவு பதத்தில் கரைக்கவும் (தேவைப்பட்டால் நீர் சேர்த்துக் கரைக்கலாம்). மாவை ரவா தோசை மாதிரி ஊற்றி ஓரங்களில் சிறிதளவு நெய்விட்டு ஒருபுறம் வெந்ததும் மறுபுறமும் திருப்பிப்போட்டு எடுக்கவும். சிறப்பு: விரத நாள்களில் சிலர் இதுபோல் தானியங்களை வைத்து தயாரித்த உணவுகளை மட்டுமே உண்பர்.